Published : 05 Feb 2018 08:23 AM
Last Updated : 05 Feb 2018 08:23 AM
இளைஞர் ஒருவர் கஞ்சா செடியுடன் செல்பி புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சென்னை “சைபர் கிரைம்” போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், கஞ்சா செடியுடன் படத்தை வெளியிட்டவர் சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சசிகுமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராயப்பேட்டை போலீஸார் சசிகுமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா தெருவில் உள்ள தனது நண்பர் கமல் (35) வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும், அதன் அருகில் இருந்து புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்தார். அதன்பேரில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த கமலையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடியுடன் புகைப்படம் எடுத்து பரப்பிய சசிகுமாரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT