Published : 05 Feb 2018 08:17 AM
Last Updated : 05 Feb 2018 08:17 AM

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை

சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலவரம், போக்குவரத்து நெரிசல், பதிவு செய்த வழக்குகளின் விபரம், தீர்த்து வைக்கப்பட்ட வழங்குகளின் எண்ணிக்கை, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்டவை குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என். சேஷசாய் (தலைமையிடம்), எம்.சி.சாரங்கன் (தென் சென்னை), எச்.எம்.ஜெயராம் (வட சென்னை), எம்.டி.கணேசமூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுதவிர சென்னை மாவட்டத்தில் உள்ள 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் மத்திய குற்றப்பிரிவில் உள்ள துணை ஆணையர்கள், போக்குவரத்து துணை ஆணையர்கள், இணை ஆணையர்களும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x