Published : 01 Feb 2018 10:00 AM
Last Updated : 01 Feb 2018 10:00 AM
அனகாபுத்தூர் வெங்கடேஸ்வரா நகர் அவ்வை தெருவைச் சேர்ந்தவர் குணா. பால் வியாபாரம் செய்து வருகிறார். குடிபோதையில் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டில் தகராறு செய்த குணாவை வெளியில் அனுப்பியுள்ளனர். அப்போது அங்கு கட்டிடம் கட்டும் பணி நடைபெறும் வீடு அருகே நாய் ஒன்று 9 குட்டிகளோடு இருந்தது.
குணா வெளியில் வரும்போது அந்த நாய்க்குட்டிகளின் தாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குணா, அந்த நாயை கட்டையால் அடித்து துரத்திவிட்டு குடிபோதையில் 9 நாய்க்குட்டிகளையும் அடித்துக் கொன்றுள்ளார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் நாய்களை அப்புறப்படுத்தி குணாவை அனுப்பி விட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் சங்கர் நகர் போலீஸில் புகார் செய்தார். இறந்து கிடந்த நாய்க்குட்டிகளை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த போலீஸார், தலைமறைவான குணாவைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT