Published : 01 Feb 2018 09:32 AM
Last Updated : 01 Feb 2018 09:32 AM
சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நீரைப் பெறுவதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இது வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்களையும் அழைத்துச் சென்று கர்நாடக முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த 27-ம் தேதி ஆர்ப்பாட்டமும், 29-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தினோம். சிறை நிரப்பும் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய வரும் 6-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT