Published : 01 Feb 2018 08:57 AM
Last Updated : 01 Feb 2018 08:57 AM

தமிழ்நாடு இசை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பிரமீளா குருமூர்த்தி பொறுப்பேற்பு

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். துணைவேந்தர் பிரமீளா இப்பதவியில் 3 ஆண்டு காலம் இருப்பார்.

சென்னை பல்கலைக்கழக இந்திய இசைத் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய இவர், அத்துறையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி குரலிசை கலையிலும் கதாகாலட்சேபத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x