Published : 01 Feb 2018 08:49 AM
Last Updated : 01 Feb 2018 08:49 AM
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், கூடுதல் பேட்டரி கார் சேவை தொடங் கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக பேட்டரியால் இயங் கும் வாகனங்கள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ரயில் நிலையங்களில் கூடுதலாக தலா 5 பேட்டரி கார் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
இதில் பயணம் செய்ய பயணி ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இச்சேவையை பெற 9566222866 என்ற அலைபேசி எண்ணிலும், எழும்பூரில் இச்சேவையை பெற 8939806991 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT