Published : 06 Jan 2018 12:12 PM
Last Updated : 06 Jan 2018 12:12 PM

போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

இதுகுறித்து அவர் கரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளைக்குள் 100 சதவீத பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்கும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x