Published : 06 Jan 2018 10:11 AM
Last Updated : 06 Jan 2018 10:11 AM
தமிழகம் முழுவதும் ஆய்வாளராக பணி செய்து வந்த 89 பேருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
நேரடியாக போலீஸ் உதவி ஆய்வாளர்களாக சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகள் பணி செய்த பின்னர் ஆய்வாளர்களாகவும், அதைத் தொடர்ந்து டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 1996-ம் ஆண்டு உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட 89 ஆய்வாளர்களுக்கு தற்போது டிஎஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். இவர்களுக்கு விரைவில் பணி இடம் ஒதுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT