Published : 06 Jan 2018 10:02 AM
Last Updated : 06 Jan 2018 10:02 AM
சென்னையில் இன்று பல்வேறு வழித்தடங்களில் 500 தனியார் பேருந்துகள் இயக்கப்படு கிறது.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.அன்பழகன் `தி இந்து’விடம் கூறுகையில், ‘‘அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாய்ப்புள்ள இடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கோயம்பேடு, ஆவடி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று 100 தனியார் பேருந்துகளை இயக்கினோம்.
இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) விடுமுறை என்பதால் தனியார் தொழில் நிறுவனங்களால் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் 500 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT