Published : 06 Jan 2018 09:47 AM
Last Updated : 06 Jan 2018 09:47 AM
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பரவத் தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ என்கிற கண் நோயால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் பரவும் இந்நோய், பருவநிலை மாற்றத்தால் தற்போது குளிர் காலத்தில் பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர், எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இதுதவிர ஏராளமானோர் தனியார் மருத்துவமனைகளில் ‘மெட்ராஸ் ஐ’க்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இது தொடர்பாக கண் சிகிச்சை டாக்டர்களிடம் கேட்டபோது, “கண் நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் துணி, பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். கண் சிவப்பது, எரிச்சல், நீர் வடிவது, கண் வீக்கம் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் கண் டாக்டரிடம் சிகிச்சைப் பெற வேண்டும். ஒரு வீட்டில் இருவருக்கு கண் நோய் இருந்தால், ஒரே மருந்தை இரு வரும் போடுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT