Published : 10 Dec 2017 11:06 AM
Last Updated : 10 Dec 2017 11:06 AM

ஆர்.கே.நகரில் நான் வென்றே தீருவேன்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் நம்பிக்கை

ஆர்.கே. நகர் தொகுதியில் வென்றே தீருவேன் என அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தனது பிரச்சாரத்தை நேற்று காலை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஐஓசி கிடங்கு அருகில் இருந்து தொடங்கினார். பிரச்சாரத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள் ஜக்கையன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரச்சாரத்தின் இடையே நிருபர்களிடம் பேசிய மதுசூதனன், “ஜெயலலிதா காலத்தில்தான் இங்கு பாதாள சாக்கடை, குடிநீர், சாலைகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல வசதிகள் செய்து தரப்பட்டன . ஒரு காலத்தில் இங்கு சாலைகளே இல்லை. ஆனால், இன்றைக்கு கல்லூரி, பாலிடெக்னிக் போன்ற நிறைய நன்மைகளை செய்த ஜெயலலிதா, நம்மை விட்டு சென்றுவிட்டார். அவர், இருந்திருந்தால் எப்படி வெற்றி பெறுவோமோ அதே அளவு வெற்றியை பெற்றே தீருவோம்’’ என்றார்.

‘‘திமுக பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதே’’ என்ற கேள்விக்கு பதிலளித்த மதுசூதனன், “திமுக வலுவடைந்துள்ளதால் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நாங்கள் வலுவடையாததால் தனித்து நிற்கிறோம்” என்றார். அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், “அவர்கள் பலவீனமாக உள்ளதால் கூட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், இரட்டை இலை ஆகிய மிகப் பலமான சக்திகளின் ஆதரவோடு உள்ளதால் தனித்துப் போட்டியிருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x