Published : 10 Dec 2017 10:47 AM
Last Updated : 10 Dec 2017 10:47 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கம் பறிமுதல்: இரண்டு பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த முகமது தஸ்லீம் (32) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் ரூ.2.8 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், சுரேஷ் ராஜாராம் என்பவரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் ரூ.27.90 லட்சம் மதிப்புள்ள 947 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை உள்ளாடை களுக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.

தங்கத் துகள்கள்

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து வந்த விமானத்தில் சிராஜுதீன் என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் ரூ.22.80 லட்சம் மதிப்புள்ள 795 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை துகள்களாக மாற்றி மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் ரூ.53.5 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதும், 2 பேர் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x