Published : 10 Dec 2017 10:44 AM
Last Updated : 10 Dec 2017 10:44 AM
தமிழகத்தில் 63-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள் ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கல்லூரிக் கல்வி இயக்குநர் பணி நியமனத்தில், பணி மூப்பு அடிப்படையில் மூத்த பேராசிரியர் ஒருவரை விதி களுக்கு உட்பட்டு தமிழக அரசு நியமனம் செய்வது வழக்கம்.
ஆனால், தற்போதுள்ள கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவிக்கு காலநீட்டிப்பு வழங்குவது என்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்து மிகச் சரியானது.
ஏற்கெனவே, கடந்த ஜூலையில் நியமனம் செய்யப்பட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் விவகாரத்தில், பட்டியலில் மூத்த பேராசிரியராக உள்ள எஸ்சி, எஸ்டி பேராசிரியர்களை புறந்தள்ளிவிட்டு இளையோர்களை அரசு நியமனம் செய்திருப்பதாக அறிகிறோம். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அது மிகத் தவறான நடைமுறையாகும்.
மேலும் தமிழகத்தில் 63-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு முதல்வர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் கணிசமான தொகை சிறப்பு ஊதியமாக தரப்படுகிறது. முதல்வர் நியமனம் செய்யப்படாத தால் கல்லூரி நிர்வாகம் உரிய அதிகாரத்துடன் முறையாக நிர்வகிக்கப்படவில்லை.
எனவே, பதிவு மூப்பு அடிப்படை யிலும், வெளிப்படைத் தன்மையிலும் முறைகேடுகள் ஏதுமில்லாமலும் காலியாக உள்ள கல்லூரி முதல்வர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவிக்கு காலநீட்டிப்பு வழங்காமல், பணி மூப்பு அடிப்படையில் மூத்த பேராசிரியர் களுக்கு கல்வி இயக்குநர் பதவி வழங்க வேண்டும். சமூகநீதி காக்கும் வகையில் எஸ்சி, எஸ்டி பேராசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இணை இயக்குநர் பதவிகள் நிரப்பப்பட வேண்டும். 63-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பதவிகளை தகுதியான பேராசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT