Published : 10 Dec 2017 09:50 AM
Last Updated : 10 Dec 2017 09:50 AM
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
வெப்பச் சலனம்
வங்கக் கடலில் தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் இல்லை. அதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தென் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT