Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM
தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட லோக் அதாலத்தில், 1.13 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.368 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. மாநில அளவில், அந்தந்த மாநில சட்டப்பணி ஆணைக்குழுக்கள் இந்த லோக் அதாலத்தை நடத்துகின்றன.
இதன்படி, தேசிய லோக் அதாலத் நேற்று நாடு முழுவதும் நடந்தது.
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் லோக் அதாலத் நடத்தப் பட்டது.
இதில், வங்கிக் கடன் வழக்கு, தொழிலாளர் வழக்கு, மின்சார வாரியம் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என்று மொத்தம் 10 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், பி.பாரதிதாசன்,டி.கிருஷ்ணகுமார், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்எம்டி டீக்காராமன், என்.சதீஷ்குமார் ஆகி யோர் தலைமையில் 10 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப் பட்டன.
அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 531 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையில், 1.13 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு,ரூ.368.47 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT