Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM
குறைபாடுள்ள செல்போனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நிறுவனம் அவருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடையாறைச் சேர்ந்த எஸ்.வினய் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 2014 ஏப்ரல் 18-ம் தேதி எச்டிசி நிறுவனத்தின் செல்போனை சூளை யில் உள்ள ஒரு கடையில் ரூ.16,500 செலுத்தி வாங்கினேன். அதற்கு ஓர் ஆண்டு வாரண்டி அளித்தனர்.
செல்போன் வாங்கிய 3 மாதத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டன. செல்போனின் திரை, மதர் போர்டும் பாதிக்கப்பட்டதால் செல்போன் இயங்கவில்லை. இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, செல்போன் தொகையைத் திருப்பி அளிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் செல்போன் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி யிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் எம்.உயிரொளி கண்ணன் பிறப்பித்த உத்தரவு: குறை பாடுள்ள செல்போனை வாங்கியதால் மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனம் செல்போனின் தொகையான ரூ.16,500, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 10,000, வழக்குச் செலவாக ரூ.5,000-த்தையும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT