Published : 10 Dec 2017 09:27 AM
Last Updated : 10 Dec 2017 09:27 AM

பல்லாவரம் நகராட்சியில் பல தெருக்களில் பாதாள சாக்கடை கழிவு ஓடுவதால் கடும் சுகாதாரக்கேடு

பல்லாவரம் நகராட்சியில் பல தெருக்களில் பாதாள சாக்கடை நிறைந்து தெருக்களில் ஓடுவதால், சுகாதாரக்கேடு ஏற்பட் டுள்ளது.

பல்லாவரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்வதற்காக மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளில் இருந்து கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, ரோடுகளின் நடுவில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு, அதில் நிரப்பப்படுகிறது. இதில் நிரம்பும் கழிவுநீர் மோட்டார் இயந்திரங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் அனைத்து கழிவுநீரையும் உறிஞ்சும், குதிரைத்திறன் அதிகம் உள்ள பம்பு செட் மோட்டார் இயந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

திறன் குறைந்த பம்பு செட் மோட்டார்கள் பயன்படுத்துவதால், பல இடங்களில் மேன்ஹோல்களில் உள்ள கழிவுநீர் உறிஞ்சப்படுவதில்லை. இதில் நிறையும் கழிவுநீர், வீடுகளில் கழிவுநீர் செல்வதற்காக வைக்கப்பட்ட குழாய்கள் மூலம் மீண்டும் திரும்ப வந்து குளம் போல் தேங்கி விடுகிறது. பல இடங்களில் அடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் செல்ல முடியாமல், பல இடங்களில் மேன்ஹோல்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஆறுகளைப்போல் தெருக்களில் ஓடுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கில் உள்ளனர். நகராட்சியில் 11-வது வார்டு கச்சேரி மலை, குட்டை பகுதியில் மேன்ஹோல்களில் இருந்து வெளியேறிய கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் உள்ள சிறுவர் பூங்காவிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பூங்காவைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் பாதாள சாக்கடைக் கழிவுகள் வெளியேறுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x