Published : 13 Oct 2017 08:55 PM
Last Updated : 13 Oct 2017 08:55 PM

ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தினகரன் தரப்பு புதிய வழக்கு

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 6 பேர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஏற்கெனவே சபாநாயகரிடம் மனு அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x