Published : 13 Oct 2017 03:25 PM
Last Updated : 13 Oct 2017 03:25 PM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை (அக். 13) சந்தித்தார். மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். நோயாளிகளுக்கு கொசு வலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT