Published : 13 Oct 2017 02:22 PM
Last Updated : 13 Oct 2017 02:22 PM
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) கூறும்போது, “வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யக் கூடும்.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மிதமான பெய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT