Published : 13 Oct 2017 09:19 AM
Last Updated : 13 Oct 2017 09:19 AM
கட்டிட காண்டிராக்டர் மற்றும் வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
கட்டிட காண்ட்ராக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் பிரேம்ஆனந்தை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது வளசரவாக்கம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி என்.ஆதிநாதன் முன்பு நடந்தது.
அப்போது தாக்கப்பட்ட வழக்கறிஞர் பிரேம்ஆனந்த் தரப்பில் சந்தானத்துக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், தன்னையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதி, வழக்கறிஞர் பிரேமானந்த் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாரா? என்ற விவரத்தை கேட்டு தெரிவிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT