Published : 30 Dec 2016 10:06 AM
Last Updated : 30 Dec 2016 10:06 AM

2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை: ராம மோகன ராவின் மகனை சிபிஐ மூலம் கைது செய்ய நடவடிக்கை

வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை சிபிஐ மூலம் கைது செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர் கள், நண்பர்களின் வீடு, அலுவலங் கள் உட்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தொழிலதிபர் சேகர் ரெட்டியைத் தொடர்ந்து ராம மோகன ராவும், அவரது மகனும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, ராம மோகன ராவ் உடல் நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 26-ம் தேதி வீடு திரும்பினார். யாரும் எதிர்பாராத வகையில், 27-ம் தேதி காலை நிருபர்களைச் சந்தித்த ராம மோகன ராவ், தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து பேட்டி அளித்தார்.

சிபிஐ மூலம் கைது நடவடிக்கை

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ராம மோகன ராவின் மகன் விவேக், அவரது வழக்கறிஞர் அமல நாதன், உறவினர்கள் ராஜகோபா லன், முன்னாள் வன அதிகாரி கல் யாணசுந்தரம் ஆகியோரின் வீடு களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி விவேக் உட்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் விவேக்கின் வழக்கறிஞர் அமலநாதன் ஆஜராகி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து ராஜகோபாலன், கல்யாணசுந்தரம் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால், விவேக் மட்டும் இன்னும் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பியுள்ளோம். ஒருமுறை குறுந்தகவலும் (எஸ்எம்எஸ்) அனுப்பியுள்ளோம். ஆனால் அவர் பல காரணங்களை கூறி நேரில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். விவேக்கின் மனைவியை பிரசவத் துக்காக போரூரில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். இதை காரணம் காட்டி விவேக் நேரில் ஆஜராகாமல் இருக்கிறார். இதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

சேகர் ரெட்டி வீட்டில் முதலில் நாங்கள் சோதனை நடத்திவிட்டு, பின்னர் சிபிஐ மூலம் கைது நடவடிக்கை எடுத்தோம். வருமான வரித்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை. எனவே, எங்க ளிடம் உள்ள விசாரணை ஆவணங் களை சிபிஐயிடம் கொடுத்து அவர்கள் மூலம் விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தலாமா என்றும் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். இந்த வழக்கில் விரைவில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x