Published : 16 Sep 2016 09:47 AM
Last Updated : 16 Sep 2016 09:47 AM

16 இடங்களில் இன்று ரயில் மறியல்: விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு

தமிழகத்தில் இன்று (16-ம் தேதி) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின்போது, 16 இடங் களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து சேலத்தில் நிருபர் களிடம் அவர் கூறியதாவது:

காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கடந்த ஒரு வார மாக வன்முறை நடைபெற்றது. இதில், தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டும், அவமானப்படுத் தப்பட்டும் உள்ளனர். தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப் பட்டுள்ளன.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித் தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று (16-ம் தேதி) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு, சாலை மறியல் போராட் டம் நடைபெறும். சென்னை, சேலம், ஈரோடு, விருத்தாசலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்துக்கு பிற கட்சி கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை; ஆதரவும் தரவில்லை.

கர்நாடகாவில் வழிபாட்டுக்கு சென்றவர்கள், லாரி ஓட்டுநர்கள் உயிருக்கு ஆபத்தான நிலை யில் இன்னும் பதுங்கி உள்ளனர். மத்திய, மாநில அரசு உடனடி யாக தகுந்த நடவடிக்கை எடுக் காவிட்டால் அடுத்தகட்ட போராட் டத்தில் விவசாய சங்கங்கள் ஈடு படும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x