Published : 05 Dec 2015 10:08 AM
Last Updated : 05 Dec 2015 10:08 AM

100 டன் நிவாரணப் பொருட்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து 2 கப்பல்கள் சென்னை வந்தன

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100 டன் நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பற்படை கப்பல்கள் நேற்று சென்னை வந்தடைந்தன.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முப் படைகள் சார்பில் நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை யில், கப்பற்படை சார்பில் ‘ஐஎன்எஸ் சக்தி’, ‘ஐஎன்எஸ் ஷயாத்ரி’ ஆகிய இரு கப்பல்கள் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து 100 டன் நிவாரணப் பொருட்களுடன் நேற்று சென்னை வந்தது. இது குறித்து, சென்னை, புதுவைக்கான கப்பற்படை அதிகாரி அட்மிரல் அலோக் பட்நாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே ‘ஐஎன்எஸ் ஐராவத்’ என்ற கப்பல் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், மேலும் இரு கப்பல்கள் இன்று (நேற்று) சென்னை வந்துள்ளன. இதில், 100 டன் அளவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை, பால் பவுடர், டவல், போர்வை, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்கும். இதைத் தவிர, 5 லட்சம் லிட்டர் குடிநீரும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், மீட்பு பணியை மேற்கொள்ள ஒரு ஹெலிகாப்டரும், 15 இயந்திரப் படகு களும் கொண்டு வரப்பட்டுள்ளன. 150 கப்பற்படை வீரர்களும் வந்துள்ளனர். அத் துடன் 80 நீச்சல் வீரர்கள், 3 மருத் துவர்கள், 8 மருத்துவ உதவியாளர்களும் வந்துள்ள னர். நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எத்தகைய சூழ்நிலையையும் எதிர் கொள்ள கப்பற்படை தயாராக உள்ளது. கடலூரில் நிவாரணப் பணிகளை மேற் கொள்ள இதுவரை தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை. வரும்பட்சத்தில் அதை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அலோக் பட்நாகர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x