Published : 23 Jan 2015 07:39 PM
Last Updated : 23 Jan 2015 07:39 PM
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13 அன்று நடைபெறுகிறது. இதனால் திமுகவும், அதிமுகவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளன.
திருவளர்ச்சோலை, திருவானை உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆனந்த் வாக்கு சேகரித்தார் .தேர்தல் பணிக்குழு தலைவர் கே.என்.நேரு ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீரங்கம் 1வது மற்றும் 2வது வார்டுகளில் அதிமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT