Published : 03 Jul 2017 08:33 AM
Last Updated : 03 Jul 2017 08:33 AM

ஸ்மார்ட் கார்டில் திருத்தங்களைச் செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

மின்னணு குடும்ப அட்டை எனப் படும் ஸ்மார்ட் கார்டில் திருத் தங்களைச் செய்துகொள்வதற் கான சிறப்பு முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்றும், நாளையும் (ஜூலை 3,4) நடக்கிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஸ்மார்ட் கார்டுகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆதார் அட்டைகளில் உள்ள விவரங்கள் ஸ்மார்ட் கார்டுக்காக எடுக்கப்படுகின்றன. அவ்வாறு எடுக்கும்போது, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றம் செய்யும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், குடும்ப தலைவரின் புகைப்படம் இல்லாத காரணத்தால் பல மின்னணு குடும்ப அட்டைகளை அச்சிட முடியாத நிலை உள்ளது.

ஆகவே, ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்றும், நாளையும் நடக்கிறது.

இந்த முகாமை மக்கள் பயன்படுத்தி திருத்தம் செய்ய வேண்டிய இனங்களைத் திருத்தம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x