Published : 08 Nov 2016 07:59 AM
Last Updated : 08 Nov 2016 07:59 AM
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி மணலியில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மணலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய அரசின் உரத்தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள்.
இங்கு பெரும்பாலும் வடமாநில மக்களே வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் மணலி உரத் தொழிற்சாலை சந்திப்பில் நேற்று போராட்டம் நடத்தினர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT