Published : 05 Dec 2015 09:12 AM
Last Updated : 05 Dec 2015 09:12 AM

வெள்ள நிவாரண உதவிக்கு அரசு டாக்டர்கள் ரூ.3 கோடி நிதி

சென்னை வெள்ள நிவாரண உதவிக்கு 15 ஆயிரம் அரசு டாக் டர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பளமான மொத்தம் ரூ.3 கோடியை வழங்குகின்றனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.செந்தில், பொதுச்செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சென்னை வெள்ள நிவாரண உதவிக்கு அனைத்து அரசு டாக்டர்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கே.செந்தில், பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 17 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு டாக்டர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை கொடுப்பது என சங்கத்தின் நிர்வாகக்குழு முடிவு எடுத்துள்ளது. இதற்கு அனைத்து அரசு டாக்டர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 15 ஆயிரம் டாக்டர்கள் ஒருநாள் சம்பளத்தை கொடுத்தால் கூட ரூ.3 கோடியை தாண்டிவிடும். இந்த ரூ.3 கோடியை சென்னை வெள்ள நிவாரண உதவிக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம். ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளும்படி தமிழக அரசுக்கு ஓரிரு நாளில் கடிதம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x