Last Updated : 07 Jun, 2017 10:13 AM

 

Published : 07 Jun 2017 10:13 AM
Last Updated : 07 Jun 2017 10:13 AM

விபரீதமான தவறும்.. விநோதமான பதிலும்.. பதிவுத்துறை அதிகாரிக்கு ரூ.25,000 அபராதம்- தகவல் ஆணையம் உத்தரவு

பண மதிப்பு நீக்கத்தால் தவணை சலுகை கேட்டு மனு

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களை அளிக் காத பதிவுத்துறை பெண் உயரதி காரிக்கு மாநில தகவல் ஆணை யம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித் துள்ளது. இதை 10 தவணையாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

சென்னை அம்பத்தூர் பதிவுத் துறை அலுவலகத்தில் ஒரு சொத்துப் பதிவுக்கான முன்னேற் பாடுகள் நடந்துவந்த நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஒரு வழக் கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தார். சம்பந்தப்பட்ட சொத்தைப் பதிவு செய்ய நீதிமன்றத் தடையாணை உள்ளதை அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனபோதி லும், அந்த சொத்து பதிவு செய்யப் பட்டது பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக சில விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் அந்த வழக்கறிஞர் கேட்டிருந்தார். அதற்கும் அம்பத்தூர் சார் பதிவாளர் உரிய பதில்களை தெரிவிக்கவில்லை.

இது மாநில தகவல் ஆணை யத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணைக்குப் பிறகு மாநில தலைமை தகவல் ஆணையர் கே.ராமானுஜம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

சம்பந்தப்பட்ட சொத்தைப் பதிவு செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று கூறுவது ஏற்புடைய தாக இல்லை. சம்பந்தப்பட்ட சொத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவு இருப் பதை சுட்டிக்காட்டி அம்பத்தூர் சார் பதிவாளருக்கு மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கடிதமும் எழுதியிருக்கிறார்.

‘வழக்கறிஞர் வெறும் கடிதம் மட்டுமே அனுப்பினார். அதில், நீதிமன்ற தடை உத்தரவு நகல் இல்லை’ என்ற பதிலும் ஏற்கும்படி இல்லை. ஏனென்றால், அந்த வழக்கறிஞர் இந்த தபாலை அனுப்ப ரூ.30-க்கு தபால்தலை ஒட்டியுள்ளார். ஆக, அந்த உறை யின் எடை 30 கிராம் இருந்திருக்க வேண்டும். எனவே, அந்த உறையில் ஒரே ஒரு தாள் மட்டுமே இருந்தது என்பதும் ஏற்கும்படி இல்லை.

ஒரு வேளை, கடிதம் மட்டுமே அதில் இருந்தாலும்கூட, சார் பதிவாளரே தானாக முன்வந்து அந்த வழக்கறிஞரிடம் நீதிமன்ற தடை உத்தரவு நகலை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப் படும் பல கடிதங்கள் தனக்கு வருவதே இல்லை என்றும் அந்த அதிகாரி கூறுகிறார். ஆனால், அலுவலகத்தின் தபால் பதிவேடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளன. 2 கடிதங்களுக்கு பதில் அளித்ததாக கூறுகிறார். சம்பந்தப்பட்ட நபருக்கு அந்த பதில் போய்ச்சேரவே இல்லை. ஒரே ஒரு பதில் மட்டும் வந்து சேர்ந்திருக்கிறது. அதில், தகவல் கேட்கப்பட்ட தேதிகூட குறிப்பிடப் படவில்லை. அலுவலகத்தின் தபால் பதிவேடுகளில் பல விவரங்களை பென்சிலால் எழுதியுள்ளனர். இது எந்த அளவுக்கு நம்பகமானது என்பது தெரியவில்லை.

சம்பந்தப்பட சொத்துப் பதிவு, சட்டவிரோதமான வகையில் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த நோக் கமே நிறைவேறவில்லை. சார் பதி வாளர் கூறும் அனைத்து விளக்கங் களும் ஏற்கும் விதத்தில் இல்லை. எனவே, தகவல் உரிமை சட்டம் பிரிவு 20(1)ன் கீழ் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அந்த அதிகாரி தற்போது மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரண மாக தன்னால் இந்த அபராதத்தை ஒரே தடவையாக செலுத்த இயல வில்லை என்று மாநில அரசிடம் அந்த அதிகாரி மனு செய்தார். இதை ஏற்று 10 தவணைகளில் ரூ.25 ஆயிரம் அபராதத்தை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் ஆணையத்திடம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

விபரீதமான தவறால் சிக்கலில் சிக்கிய அதிகாரி, மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை காரணம் காட்டி 25 ஆயிரம் ரூபாயைக் கட்ட சலுகை கேட்டதும், தலா ரூ.2,500 என 10 தவணையில் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் சாமானிய மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x