Published : 07 Dec 2016 04:56 PM
Last Updated : 07 Dec 2016 04:56 PM
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ''விசாகப்பட்டினத்துக்குத் தெற்கே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயல் சின்னமாக உருவாக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தென் தமிழகத்தின் கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால், தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT