Published : 22 Mar 2017 07:35 PM
Last Updated : 22 Mar 2017 07:35 PM
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறும்போது, ''வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியல் இருக்கும்.
புதன்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, கரூர் பரமத்தி வேலூர், வேலூர், திருப்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில் 37 டிகிரி செல்சியஸ், தோண்டி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் 36 டிகிரி செல்சியஸ், சென்னையில் 34 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT