Published : 08 Nov 2016 07:12 PM
Last Updated : 08 Nov 2016 07:12 PM

வானிலை முன்னறிவிப்பு: ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

காற்று வேகமாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்று வேகமாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கோட்டையில் 20 மில்லி மீட்டர், மதுராந்தகம், திருவண்ணாமலை, காட்டுமன்னார்கோவில், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x