Published : 07 Dec 2016 11:45 AM
Last Updated : 07 Dec 2016 11:45 AM
வழக்கமான உடல் பரிசோதனை தான் என்று தன் உடல்நிலைப் பற்றிய வதந்திக்கு கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார்.
புதன்கிழமை காலை முதலே, கவிஞர் வைரமுத்துவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூகவலைத்தளத்திலும் பரவலாக வைரமுத்துவைப் பற்றி பேசத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து "ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.
நான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT