Published : 30 Jan 2017 11:41 AM
Last Updated : 30 Jan 2017 11:41 AM

வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரத்தில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சேது நாராயணபுரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரத்தில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதைத்தொடர்ந்து சேதுநாராயணபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்துவரப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். மாடு முட்டியதில் 2 பேர் லேசான காயமடைந்தனர். ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம விழா குழுவினர் செய்திருந்தனர். 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x