Published : 23 May 2015 07:37 AM
Last Updated : 23 May 2015 07:37 AM
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகர் (38), சுந்தரம் (54). கட்டிடத் தொழிலாளர்களான இருவரும், நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மாம்பாக்கத்துக்கு பேருந்தில் சென்றனர்.
அங்கு தேசிய நெடுஞ் சாலையைக் கடக்க முயன்ற போது, வேலூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற மணல் லாரி அவர்கள் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT