Published : 28 Jun 2016 08:09 AM
Last Updated : 28 Jun 2016 08:09 AM

ரவுடி கொலையில் பெண் உட்பட 6 பேர் கைது: கணவனை கொன்றதற்காக பழி தீர்த்தார்

ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்தவர் வேலு(38). நேற்று முன்தினம் இரவு நந்தனம் சிக்னல் அருகே உள்ள விடுதி அருகே நண்பரை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றபோது 5 பேர் கொண்ட கும்பலால் சராமரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சைதாப்பேட்டை போலீ ஸார் வழக்குப்பதிந்து விசாரிக் கின்றனர்.

விசாரணையில், வேலுவின் நண்பர் சசிகுமார் (36) என்பவரை நேற்று அதிகாலையில் போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தேவி(32), வரதன்(31), சீனிவாசன் (33), மதன்(31), சேகர் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறும்போது, '2013-ம் ஆண்டு வேலுவின் அண்ணன் சிவா என்பவரை திருவான்மியூர் மங்களேரியைச் சேர்ந்த கந்தன் என்பவர் கொலை செய்துள்ளார். இதனால் வேலு தனது கூட்டாளிக ளுடன் சேர்ந்து, 2014-ம் ஆண்டு கந்தனை கொலை செய்துள்ளார். இதனால் வேலுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார் கந்தனின் மனைவி தேவி. இதற்காக வேலுவின் நண்பர் சசிக்குமாரின் உதவியை கேட்க, அதற்கு அவரும் சம்மதித்து இருக்கிறார்.

கொலை சம்பவம் நடந்த போது அந்த இடத்துக்கு வேலுவை வரவைத்ததே அவரது நண்பர் சசிக்குமார்தான். கணவனை கொலை செய்தவரை கூலிப்படை மூலம் கொன்று பழி தீர்த்துக் கொண்டேன் என்று தேவி தனது வாக்குமூலத்தில் கூறியிருக் கிறார்’’ என்று தெரிவித்தனர். கூலிப்படை தலைவனாக செயல் பட்ட ருக்மாங்கதன், பிரசன்னா ஆகியோரை பிடிக்கும் முயற்சி யில் போலீஸார் ஈடுபட் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x