Published : 08 Nov 2016 09:44 AM
Last Updated : 08 Nov 2016 09:44 AM
ரயில்வே துறையின் தென்மண் டல பாதுகாப்பு ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த கே.ஏ.மனோகரன் நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் கே.ஏ.மனோகரன். எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேச னில் பொறியியல் பட்டம் படித்த இவர், கடந்த 1982-ம் ஆண்டு ரயில்வேத் துறையில் பணியில் சேர்ந்தார். வடக்கு கிழக்கு ரயில்வே மண்டலத்தில் பணியைத் தொடங்கி தொலைத் தொடர்பு பொறியாளர், மூத்த பொறியாளர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
தெற்கு ரயில்வேயில் தொலைத் தொடர்புப் பிரிவில் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலை யில், ரயில்வேத் துறையின் தென்மண்டல பாதுகாப்பு ஆணை யராக கடந்த 2-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தெற்கு ரயில்வே, பெங்களூரு, சென்னை, கொச்சி ஆகிய மெட்ரோ ரயில் நிறுவனங்களின் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT