Published : 16 May 2016 07:26 AM
Last Updated : 16 May 2016 07:26 AM
வாக்குப்பதிவு நாளன்று சம்பளத் துடன் கூடிய விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவி்ட் டும், சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களுக்கு விடுமுறை அளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப் புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதற்காக பிரபல நடிகர்கள் மற்றும் விளை யாட்டு வீரர்களை வைத்து பிரச் சாரம் செய்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரின் மொபைல் போனுக் கும் தேர்தலில் வாக்களிக்க கோரி குறுஞ்செய்தியும் அனுப்பி வருகி றது. மேலும் வாக்காளர்கள் அனை வரும் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு நாளான மே 16 அன்று எல்லா தனியார் நிறுவனங்களும் கண்டிப்பாக தங்கள் ஊழியர் களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும் தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவை சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவ னங்கள் மதிக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் விப்ரோ, டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்,, இன்போசிஸ் என ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வாக்களிக்க ஊருக்கு செல்ல தங் களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படவில்லை என்று ஐடி நிறுவன ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை யில் உள்ள ஐ.டி. நிறுவன பணி யாளர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் பரிமளா ’தி இந்து’விடம் கூறியதாவது:
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது. ‘‘விடுமுறைக்குப் பதிலாக 2 மணி நேரம் பெர்மிஷன் தருகிறோம்’’ என ஐடி நிறுவனங்கள் முன் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இத னால் பெரும்பாலான பெரிய நிறு வனங்கள், விடுப்பு அளிப்பதற்கு பதிலாக, தேவைப்பட்டால் விடுப்பு கோரி விண்ணப்பியுங்கள் என ஊழியர்களிடம் கூறியுள்ளன. இவ் வாறு விடுப்பு எடுத்தால் அந்த விடுப்பு ஊழியர்களின் கணக்கில் தான் சேருமேயன்றி, ஊதியத்துடன் கூடிய விடுப்பாக மாறாது. இதனால் பலர், தங்களது சொந்த ஊருக்குச் செல்லவில்லை.
இன்னும் ஒரு சில நிறுவனங்கள் ‘‘ஓட்டுப்போட விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் விடுமுறை நாளில் பணிபுரிந்து அதை ஈடு செய்யுங்கள்’’ எனக் கூறியுள்ளன. அரசு விடுமுறை நாட்களிலும் கூட பணியாளர்களுக்கு விடு முறை அளிக்காத இந்த ஐ.டி.நிறுவனங்கள் தற்போது ஓட்டுப் போட விடுப்பு அளிக்காமல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியுள்ளன. எனவே அந்த நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT