Published : 07 Dec 2016 11:36 AM
Last Updated : 07 Dec 2016 11:36 AM

மூன்று துறைகளில் முத்திரை பதித்தவர் சோ - விஜயகாந்த் புகழஞ்சலி

திரைப்படம், பத்திரிகை மற்றும் அரசியல் துறைகளில் தன் முத்திரையைப் பதித்தவர் சோ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவு குறித்து இன்று விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''பழம்பெரும் நடிகரும், முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், வழக்கறிஞரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான 'சோ' ராமசாமி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையடைகிறேன்.

திரைப்படம், பத்திரிகை மற்றும் அரசியல் துறைகளில் தன் முத்திரையை பதித்தவர் சோ. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன், மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x