Published : 08 Nov 2016 08:00 AM
Last Updated : 08 Nov 2016 08:00 AM

மின் கட்டணம் செலுத்தும் மையங்களில் கள்ள நோட்டு கண்டறியும் இயந்திரம்

மின்வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்தும் மையங்களில் கள்ள நோட்டுகளை கண்டறிவதற்கான இயந்திரம் பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

நுகர்வோர்கள் தாங்கள் உபயோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்தை இரண்டு மாதத்துக்கு ஒருமுறை செலுத்தி வருகின்றனர். இந்த மின்கட்டணங்கள் மின்வாரிய அலுவலகங்கள், வங்கிகள், இ-சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மூலம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மின்வாரிய அலுவலகங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களில் கள்ளநோட்டுகளை கண்டறிவதற்கான இயந்திரங்களை பொருத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், கள்ள நோட்டுகள் புழக் கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் ஒருபகுதியாக மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர் செலுத்தும் கட்டணத்தில் கள்ளநோட்டுகள் வருவதைத் தடுப்பதற்காக அந்நோட்டுகளை கண்டறி வதற்காக இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் மின்வாரிய அலுவலகங்களில் இந்த இயந்திரங்கள் படிப்படியாக நிறுவப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x