Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

மாநிலங்களவைத் தேர்தல் மேற்பார்வையாளர் பிரவீன்குமார்

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான மேற்பார்வை யாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புதன் கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் மாநிலங்களவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ம் தேதி நடக்க வுள்ளது. இந்த தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக மனுக்களை பரிசீலனை செய்யவும், வாக்குப் பதிவு கண்காணிப்பு, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளைக் கண்காணிக்க மேற்பார்வையாளராக தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x