Published : 28 Jun 2016 07:15 PM
Last Updated : 28 Jun 2016 07:15 PM
சென்னை தி.நகரில் உள்ள ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு மையத்தில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு உதவித்தொகையுடன் பல்வேறு வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
எம்எஸ் ஆபீஸ், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்), பொது அறிவு ஆகிய பயிற்சிகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம்.
பயிற்சிக் காலம் 11 மாதங்கள். பயிற்சிக்காலத்தில் மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிகள் ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளன. தினமும் காலை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 044-24342421, 24337387 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு மையத்தின் கவுரவ முதல்வர் எஸ்.சேகர் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT