Published : 08 Nov 2016 08:01 AM
Last Updated : 08 Nov 2016 08:01 AM

மலேசிய தமிழர் மாரடைப்பால் மரணம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் மலேசிய தமிழர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் மகேந்திர தட்சிணாமூர்த்தி(50). தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள கோயில்களை சுற்றிப் பார்ப்பதற்காக மனைவி மற்றும் மகன்களோடு இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் புனித யாத்திரையை முடித்துவிட்டு மலேசியா செல்வதற்காக குடும்பத்துடன் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார்.

விமானத்துக்காக காத்திருந்தபோது, தட்சிணாமூர்த்திக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த விமான நிலைய டாக்டர்கள் குழுவினர், அவருக்கு முதலிதவி சிகிச்சை அளிக்க வந்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x