Published : 09 Jul 2017 11:12 AM
Last Updated : 09 Jul 2017 11:12 AM

மருத்துவ படிப்புகளுக்கு 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்: 14-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 50,558 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன என்று மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலாளர் ஜி.செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒரு விண் ணப்பமும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனி விண்ணப்பமும் விநியோகிக்கப் பட்டன. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் விண்ணப்ப விநியோகம் முடிவடைந்தது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத் துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க நேற்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக் கப்பட்டிருந்தது. இறுதி நாளான நேற்று ஏராளமானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

இதுதொடர்பாக மருத்துவ மாண வர் சேர்க்கை தேர்வுக் குழு செயலாளர் ஜி.செல்வராஜ் கூறும்போது, ‘‘எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 50,558 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 25 ஆயிரம் விண்ணப்பங்கள்தான் சமர்ப்பிக்கப்பட்டது. தரவரிசைப் பட்டியல் 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x