Published : 23 May 2015 07:35 AM
Last Updated : 23 May 2015 07:35 AM
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த புல்லேரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு கால்நடை பெண் மருத்துவரை வழிமறித்து, 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த அழகு சமுத்திரம் கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவராக ஹேமாவதி உள்ளார். இவர், நேற்று இரு சக்கர வாகனத்தில் செங்கல்பட்டு- திருக்கழுக்குன்றம் சாலை வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
புல்லேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஹேமாவதியை வழிமறித்து, அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதில், ஹேமாவதியின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT