Published : 01 Jan 2017 06:25 PM
Last Updated : 01 Jan 2017 06:25 PM
மரக்கன்றுகள் நடுவதை புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொண்டு நாட்டின் இயற்கை செல்வத்தைக் காப்பாற்ற வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ஆழ்வார்பேட்டை பகுதியில் வார்தா புயலால் விழுந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை ஸ்டாலின் நட்டார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் கணக்கில் அடங்காத மரங்களை இழந்திருக்கிறோம். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வார்தா புயலால் குவியல் குவியலாக கிடப்பதை பார்த்தோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம்மால் முடிந்தவரை மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.
நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை நம் வருங்கால சந்ததியினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
மரக்கன்றுகள் நடும் பணியை ஒவ்வொருவரும் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொண்டு நாட்டின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT