Published : 22 Mar 2017 09:17 PM
Last Updated : 22 Mar 2017 09:17 PM
மங்காடு கீழ்ப்பகுதியில் தடுப்பு அணை ஒன்றை அமைக்க ரூ.18 கோடி செலவில் கட்டுவதற்கு பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. கிள்ளியூர் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார், 'கடல் நீர் புகுவதால் நிலத்தடிநீரின் தன்மைகெட்டுவிடுகிறது என்பதால் அதனை தடுப்பதற்கு ஏதுவாக, தடுப்பு அணை ஒன்றை மங்காடு கீழ்ப்பகுதியில் அமைக்க வேண்டும்' என்று கோரினார்.
அதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மங்காடு கீழ்ப்பகுதியில் தடுப்பு அணை ஒன்றை அமைக்க ரூ.18 கோடி செலவில் கட்டுவதற்கு பரிசீலனையில் உள்ளது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT