Published : 08 Nov 2016 08:12 AM
Last Updated : 08 Nov 2016 08:12 AM

மகாத்மா காந்தியின் பேரன் கானுபாய் காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் கானுபாய் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக சூரத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

மகாத்மா காந்தியின் மூத்த மகன் ராம்தாஸ் காந்தியின் மகன் கானுபாய். இவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியாற்றினார். அமெரிக்காவில் கானுபாய் காந்தியும் அவரது மனைவி சிவலட்சுமியும் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் குஜராத் திரும்பினர். இந்நிலையில் கானுபாய்க்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின்னர் சூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த கானுபாய், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.

கானுபாய் காந்தியின் மறை வுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x