Published : 31 Jan 2017 09:32 AM
Last Updated : 31 Jan 2017 09:32 AM

மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்த பேரவை 30 நிமிடம் ஒத்திவைப்பு

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தலைமைச் செய லகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக் கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இதற்காக சட்டப்பேரவை 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று அனு சரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தினர். அதைத் தொடர்ந்து தலை மைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி படத் துக்கு முதல்வர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் முதல்வர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க, அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், உயர் அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் அதை திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர். அவர்களுடன் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக் களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்காக தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேற்று காலை 10.45 முதல் 11.15 மணி வரை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x