Published : 16 Sep 2016 09:58 AM
Last Updated : 16 Sep 2016 09:58 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ள பேரறி வாளனை, ஆயுள் தண்டனைக் கைதி ராஜேஷ்கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் கடந்த 13-ம் தேதி தாக்கினார். இந்த தாக்குதல் தொடர்பாக வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி முகமது அனீபா நேற்று, பேரறிவாளன், ராஜேஷ்கண் ணாவிடம் விசாரணை நடத்தினார்.
ராஜேஷ்கண்ணாவை வேறு சிறைக்கு விரைவில் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இயக்குநர் கவுதமன், பேரறி வாளனின் தாய் நேற்று பேரறி வாளனை சந்தித்தனர். இதுகுறித்து, கவுதமன் கூறும்போது, ‘‘சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண் டும். பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT